தொழிலாளி மர்ம சாவு


தொழிலாளி மர்ம சாவு
x

சிவகாசியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

விருதுநகர்

சிவகாசி,

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 56). இவர் தனது மனைவியை பிரிந்து கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வெள்ளூரில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக சக ஊழியர் கனகராஜிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஆட்டோவில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து லட்சுமணனின் உறவினர் பில்லம்மாள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story