ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 29 July 2023 1:00 AM IST (Updated: 29 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

நீலகிரி

கூடலூர்

மசினகுடி அருகே தொட்லிங்க் பகுதியை சேர்ந்தவர் ஈரன்(வயது 47). தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றில் ஈரன் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மசினகுடி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, ஈரன் ஆற்றில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story