புவனகிரி அருகே தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி ஆற்றை கடக்க முயன்றபோது பரிதாபம்


புவனகிரி அருகே    தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி    ஆற்றை கடக்க முயன்றபோது பரிதாபம்
x

புவனகிரி அருகே ஆற்றை கடக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்

புவனகிரி,

தொழிலாளி

புவனகிரி அருகே உள்ள நாளாந்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65), விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை அதேஊரில் உள்ள வெள்ளாற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர், வெள்ளாற்று தண்ணீரில் நீந்தியபடி மறுகரையில் உள்ள ஆயிப்பேட்டை கிராமத்துக்கு செல்ல முயன்றார். வெள்ளாற்றில் நீந்தியபடி கடக்க முயன்றபோது, அவர் தண்ணீரில் மூழ்கியதோடு, மூசு்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இதுபற்றி புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சோகம்

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் மூழ்கி பலியான பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சமப்வம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெள்ளாற்றை நீந்திக்கடக்க முயன்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story