தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி


தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி
x

வயலில் மீன்பிடிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள வாலியாம்விளையை சேர்ந்தவர் ரைமண்ட் (வயது 60), கூலித்தொழிலாளி. இவர் தினமும் மாலையில் வெங்குளம்கரை பகுதியில் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். நேற்று மாலையிலும் வழக்கம் போல் வயலில் மீன்பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வயலுக்குள் இறங்கி மயங்கிய நிலையில் ரைமண்டை மீட்டனர். பின்னர் அவரை பாறசாலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story