பழனி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி


பழனி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 April 2023 8:45 PM GMT (Updated: 9 April 2023 8:45 PM GMT)

பழனி அருகே மீன்பிடித்த போது கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த கணக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 46). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அதே பகுதியில் உள்ள கிணற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய பெரியசாமியை தேடினர். அப்போது அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் ஆயக்குடி போலீசார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story