குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Sep 2023 7:30 PM GMT (Updated: 10 Sep 2023 7:31 PM GMT)

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பட்டமங்கலம் ஊராட்சி சொட்டால்வண்ணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது52). தொழிலாளி. சம்பவத்தன்று கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் மீன் பிடிக்க சென்றார். அப்போது குளத்தின் படித்துறையில் நின்றிருந்த அவர் எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதையடுத்து உடன் வந்தவர்கள் அவரை மீட்டு கீழ்வேளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர் கார்த்திகேயனை பரிசோதனை செய்த போது வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story