தொழிலாளி வெட்டிக்கொலை


ஒரத்தநாடு அருகே கறி விருந்தில் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே கறி விருந்தில் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது55). கூலித்தொழிலாளி. இவரது தந்தை துரைமாணிக்கம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு 16-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக இறைச்சி சமைத்து உறவினர்களுக்கு பரிமாறப்பட்டது.

அப்போது இளங்கோவன் தனது மனைவி லெட்சுமியிடம் சமைத்து வைத்திருந்த இறைச்சியை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இளங்கோவனை அவரது மகன் தங்கதுரைஎன்ற விஜய்(25) தட்டிக்கேட்டார். அப்போது தந்தை- மகன் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு இளங்கோவன் வீட்டில் தூங்கிகொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த அவரது மகன் தங்கதுரை அரிவாள் மற்றும் கோடரியால் சரமாரியாக தனது தந்தை இளங்கோவனின் தலை மற்றும் முதுகில் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பாநாடு போலீசார் இளங்கோவனின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவாக இருந்த தங்கதுரையை போலீசார் கைது செய்தனர். கறி விருந்தில் தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அவரது மகன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story