கார் மோதி தொழிலாளி காயம்

கார் மோதி தொழிலாளி காயம் அடைந்தார்.
திருப்புவனம்
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த நல்லாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(வயது 55). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைகளை முடித்துவிட்டு, சிவகங்கையில் இருந்து நல்லாகுளத்துக்கு மோட்டார்சைக்கிளில் வந்தார். நல்லாகுளம் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது பின்னால் மதுரை திருநகர் பகுதியை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கருப்பையா சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா விசாரித்து வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





