கார் மோதி தொழிலாளி படுகாயம்


கார் மோதி தொழிலாளி படுகாயம்
x

கார் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 39), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தத்தனூர் மாந்தோப்பில் டீ குடித்து விட்டு தனது வீட்டிற்கு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து ெசன்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிராமத்தை சேர்ந்த அபுல்பைசல் (43) என்பவர் ஓட்டிவந்த கார் எதிர்பாராதவிதமாக தாமரைச்செல்வன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story