ஆம்புலன்ஸ் மோதியதில் காயம் அடைந்த தொழிலாளி சாவு


ஆம்புலன்ஸ் மோதியதில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
x

நாட்டறம்பள்ளி அருகே ஆம்புலன்ஸ் மோதியதில் காயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (வயது 50). இவர் கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு செல்வி என்கிற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹரி தனது மோட்டார் சைக்கிளில் நாட்டறம்பள்ளிக்கு வந்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

தோழன்வட்டம் பகுதியில் சென்றபோது புதுப்பேட்டை பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் ஹரி தூக்கி வீசப்பட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இது குறித்து மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அரவிந்த் (25) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story