மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

அரக்கோணம் அருகே மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம் அருந்ததியர் பகுதியை சேர்ந்தவர் வீரசாமி (வயது 62), கூலி வேலை செய்து வந்தார். இவர் வீட்டில் மின் மோட்டாருக்கு மின்சார இணைப்பு கொடுத்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று (வியாழக்கிழமை) வீராசாமியின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் வீரசாமி மின்சாரம் தாக்கி இறந்தது குடும்பத்திலும், கிராமத்தில் உள்ளவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story