மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 75). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி வேட்டுவப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பண்ண கவுண்டர் என்பவருக்கு சொந்தமான கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றில் மின் மோட்டார் இயங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்தசமயம் செங்கோட்டையன் மின் மோட்டாரை தொட்டபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் பணியில் இருந்த சக தொழிலாளிகளான ஆறுமுகம், நாகராஜ் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் செங்கோட்டையன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளி செங்கோட்டையனுக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story