மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

வேட்டங்குடி கிராமத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கவியரசன் (வயது 32). விவசாய கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு பின்புறம் உள்ள மின் வயரை இழுத்து சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவியரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கவியரசனுக்கு கிருத்திகா (28) என்ற மனைவியும், ரோகித் (5), ஹரிஷ் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story