மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:45 PM GMT)

சீர்காழியில் பேக்கரி வாசலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி போலீசார் விசாரணை

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி தாலுகா திருக்கருகாவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது45). இவர் சீர்காழி பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் பேக்கரி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சங்கர் பணி முடிந்து கடையின் ஷட்டர் கதவில் கை வைத்தவாறு நின்று கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் ஒரே இடத்தில் அசையாமல் நிற்பதை கண்ட வணிகர்கள் அவரை கூப்பிட்ட போது அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வணிகர்கள், அவரது அருகில் சென்ற பார்த்த போது சங்கரை மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சங்கருக்கு ஷகிலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.


Next Story