நெகமம் அருகே கார் மோதி தொழிலாளி பலி

நெகமம் அருகே கார் மோதி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
நெகமம்
நெகமம் அடுத்த ஜக்கார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 50).கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் காட்டம்பட்டி கள்ளிமடை பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த கார் ஒன்று சின்னச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது ேமாதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னச்சாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





