சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலி

சரக்கு ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
வடமதுரை அருகே உள்ள எம்.வி.நாயக்கனூரை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று காலை இவர், ஆர்.புதூர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு ரெயிலில் அடிபட்டு பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





