அரசு பஸ் மோதி தொழிலாளி பலி


அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Sep 2023 9:45 PM GMT (Updated: 15 Sep 2023 9:46 PM GMT)

சின்னமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தொழிலாளி பலியானார்.

தேனி

மோட்டார் சைக்கிள் மீது மோதல்

சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை மேற்கு காலனியை சேர்ந்தவர் ஜெகன்குமார் (வயது 21). கூலித்தொழிலாளி. கோம்பையை சேர்ந்த ராஜேந்திரன் மகள் அன்னபூரணி (19). இவர்கள் இருவரும் நண்பர்கள். அன்னபூரணி சின்னமனூரில் உள்ள தனியார் வணிக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரை, தினமும் வேலை முடிந்து ஜெகன்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அன்னபூரணியை ெஜகன்குமார் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து சென்றார். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையத்தில் துர்க்கை அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது எதிரே கம்பத்தில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் ஜெகன்குமார் தலையில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அன்னபூரணி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசார் ஜெகன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த அன்னபூரணியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story