அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
திங்கள்சந்தை:
அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் குட்டகுழியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று சுங்கான்கடை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





