திண்டிவனத்தில் மினிலாரி மோதி தொழிலாளி பலி


திண்டிவனத்தில்     மினிலாரி மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:46 PM GMT)

திண்டிவனத்தில் மினிலாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

உணவு வாங்க சென்றபோது...

திண்டிவனம் சேடன் குட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் நாகராஜ் (வயது 55). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு வாங்குவதற்காக திண்டிவனம்-சென்னை மெயின் ரோடு வழியாக ஓட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு பால் கேன்களை ஏற்றி வந்த மினி லாரி நாகராஜ் பின்னால் மோதியது.

தொழிலாளி பலி

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான கூலி தொழிலாளி நாகராஜுக்கு தனலட்சுமி (48) என்ற மனைவியும், அன்பு(30) என்கிற மகனும், மகாலட்சுமி (28) என்ற மகளும் உள்ளனர்.


Next Story