மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள காக்கவிளை பனிச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் சுபாஷ் (வயது 36). இவர் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சுபாஷ் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கருங்கல்-குறும்பனை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த பபியான்ஸ் மகன் சஜின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த சுபாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சுபாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுபாஷின் சகோதரர் டென்னிஸ் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story