மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:45 PM GMT)

செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் அருகே பரசலூர் கலைஞர் காலனியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 55). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் சாத்தனூர் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது நல்லாடை அம்பேத்கர் காலனியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், காசிநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காசிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அக்கம்பக்கத்தில இருந்தவர்கள் படுகாயம் அடைந்த ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான காசிநாதன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story