பள்ளி வாகனம் மோதி தொழிலாளி சாவு

தென்காசி அருகே பள்ளி வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). கூலித் தொழிலாளி. இவர் நேற்று தென்காசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பள்ளி வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





