பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 6 July 2023 6:45 PM GMT (Updated: 8 July 2023 12:03 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர், பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயா மற்றும் மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் இறந்து விட்டதால் குணசேகரன் மட்டும் தனியாக வசித்து வந்தார். இதனால் குணசேகரன் கடந்த சில மாதங்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அவர் விஷம் குடித்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குணசேகரன் உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story