நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 9:42 AM GMT)

நல்லம்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

தர்மபுரி

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே கூன்மாரிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ராஜேந்திரன் கடந்த 16-ந் தேதி வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story