தொழிலாளி தற்கொலை

நெகமம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நெகமம்
நெகமத்தை அடுத்த ஏரிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 45), தொழிலாளி. இவர் அடிக்கடி மதுக்குடித்துவிட்டு வீட்டு செலவுக்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆறுச்சாமி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுச்சாமி பரிதாபமாக இறந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





