தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 30 Aug 2023 7:00 PM GMT (Updated: 30 Aug 2023 7:00 PM GMT)

தொழிலாளி தற்கொலை

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஸ்ரீஹரி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 37). தொழிலாளி. இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கண்ணன் குடும்பத்தை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தனியே வசித்து வந்தார். மேலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கண்ணன் வீட்டில் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story