தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
நாமக்கல்

புதுச்சத்திரம் அருகே அ.ஆயிபாளையத்தில் சாஸ்திரி நகரில் வசித்து வந்தவர் செல்வகுமார் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கல் கட்டும் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் நேற்று முன்தினம் அவரது தாயார் கண்ணம்மாள் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story