தொழிலாளி தற்கொலை


தொழிலாளி  தற்கொலை
x

கம்பம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்

தேனி

கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா (43). கருத்து வேறுபாடு காரணமாக விமலா கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் செல்வம் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையே கடந்த 7-ந்தேதி இரவு வீட்டில் உள்ள அறையில் செல்வம் தூங்க சென்றார். பின்னர் மறுநாள் வெகுநேரமாகியும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது செல்வம் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story