தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

பெரும்பாறை அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு. அவருடைய மகன் நவீன்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது பெற்றோர், பல இடங்களில் பெண் பார்த்தனர். இருப்பினும் திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நவீன்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story