தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2023 12:30 AM IST (Updated: 16 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தேனி

பொம்மயகவுண்டம்பட்டி பள்ளி ஓடை தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவரது மகன் சந்துரு இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த முருகேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். கடந்த 14-ந்ேததி வீட்டில் இருந்து வீரப்ப அய்யனார் கோவில் பகுதிக்கு அவர் சென்றார். அங்கு அரளி விதையை தின்று விட்டு வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story