தொழிலாளி தற்கொலை


தொழிலாளி  தற்கொலை
x

தொழிலாளி திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

தா.பேட்டை அருகே அஞ்சலம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ் (வயது 55). கூலி தொழிலாளியான இவர் பல் வலியால் அவதி அடைந்து வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் பேட்டரிக்கு ஊற்றப்படும் திராவகத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story