உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி பார்வையிடலாம்...!


உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி பார்வையிடலாம்...!
x

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கைள நாளை ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னமான கடற்கரை கோவில்,கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்டவைகளை காண கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதானச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதித்து தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story