பள்ளி சத்துணவு கூடத்தில் சமைக்க வைத்திருந்த அரிசியில் புழுக்கள்


பள்ளி சத்துணவு கூடத்தில் சமைக்க வைத்திருந்த அரிசியில் புழுக்கள்
x

பள்ளி சத்துணவு கூடத்தில் சமைக்க வைத்திருந்த அரிசியில் புழுக்கள் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

புகழூர் தாலுகா திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்து மேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு பயன்படுத்தப்படும் மதிய உணவு தயாரிப்பதற்காக சத்துணவு கூடத்தில் சாக்கு மூட்டையில் வைக்கப்பட்டுள்ள அரிசியில் ஏராளமான புழுக்களும், செல்களும் ஊறுகின்றன. இதைப் பார்த்த மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆனால் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் இது குறித்துகடும் நடவடிக்கை வேண்டும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story