கோட்டை காளியம்மன் கோவிலில் வழிபாடு


கோட்டை காளியம்மன் கோவிலில் வழிபாடு
x

கூத்தாநல்லூர் அருகே கோட்டை காளியம்மன் கோவிலில் வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் புனவாசலில் கோட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story