வேளுக்குடி வீரஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு


வேளுக்குடி வீரஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு
x

வேளுக்குடி வீரஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பழையனூர் சஞ்சீவி ராய ஆஞ்சநேயர் கோவில், கிளியனூர் மற்றும் சாத்தனூர் பெருமாள் கோவில்களிலும் சனிக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது.


Next Story