தர்மபுரி மாவட்டத்தில், நாளை போலீஸ், தீயணைப்பு-சிறை காப்பாளர் பணிகளுக்கு எழுத்து தேர்வு


தர்மபுரி மாவட்டத்தில், நாளை போலீஸ், தீயணைப்பு-சிறை காப்பாளர் பணிகளுக்கு எழுத்து தேர்வு
x

தர்மபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் மொத்தம் 11 ஆயிரத்து 462 பேர் எழுதுகிறார்கள்.

தர்மபுரி

எழுத்து தேர்வு

2022-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் போலீசார், தீயணைப்பு மற்றும் சிறை காப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 9 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற உள்ளது.

ஆண் தேர்வர்களுக்கு 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 8 ஆயிரத்து 766 ஆண் தேர்வர்கள் கலந்து கொண்டு எழுத்து தேர்வு எழுதுகிறார்கள்.

இதேபோன்று பெண் தேர்வர்களுக்கு தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மற்றும் நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலைக்கல்லூரி ஆகிய 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 696 பெண் தேர்வர்கள் கலந்துகொண்டு எழுத்து தேர்வு எழுதுகிறார்கள்.

அழைப்பாணை

தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் நுழைவு சீட்டுடன் (ஹால் டிக்கெட்) காலை 8.30 மணி முதல் அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள அழைப்பானை வரப்பெற்ற தேவர்கள் அழைப்பு கடிதத்துடன் வரவேண்டும்.

மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து தேர்வுக்கு ஆஜராக வேண்டும். தேர்வர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட பொது அடையாள அட்டை, பேனா மற்றும் நுழைவுச்சீட்டு தவிர செல்போன்கள், வால்லட், ப்ளூடூத், ஸ்மார்ட் கெடிகாரங்கள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தாங்கள் எடுத்து வரும் பொருளுக்கு தாங்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தேர்வு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்குள் ஆஜராக வேண்டும். தாமதமாக வரும் நபர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.


Next Story