கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 6 மையங்களில் எழுத்து தேர்வு


கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 6 மையங்களில் எழுத்து தேர்வு
x

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 6 மையங்களில் எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அரியலூர் வட்டத்திற்கு கீழப்பழுவூர் அருகே கருப்பூர் விநாயகா கல்வியியல் நிறுவனத்திலும், செந்துறை வட்டத்திற்கு செந்துறை செயின்ட் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் வட்டத்திற்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மேலும் அதன் வளாகத்தில் உள்ள மீனாட்சி ராமசாமி பி.எட் கல்லூரியிலும், ஆண்டிமடம் வட்டத்திற்கு விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் ஆகிய 6 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்துக்கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் தேர்வு மைய நுழைவு சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது https://agaram.tn.gov.in/onlineforms/formpageopen.php?id=43-174 என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், செல்போன் எண்ணையும் பதிவு செய்து நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாவட்ட வேலை வாய்ப்பகம் மற்றும் முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50-மணிக்கு பின்பும் மற்றும் காலை 10.50-மணிக்கு முன்பும் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயின்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். நுழைவுச்சீட்டு, கருப்பு பால்பாயின்ட் பேனாவைத் தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரர்கள் செல்போன், புத்தங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது. இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story