ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்


ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்
x

நாமகிரிப்பேட்டையில் ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

ராசிபுரம்

மஞ்சள் ஏலம்

ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,850 மூட்டைகளும், உருண்டை ரகம் 800 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

ரூ.1.10 கோடிக்கு விற்பனை

இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 969 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 403-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 802-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 100-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 999-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.13 ஆயிரத்துக்கும் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் 2,700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story