ரூ.45 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்


ரூ.45 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
x

நாமகிரிப்பேட்டையில் 1,100 மஞ்சள் மூட்டைகள் ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனது. மஞ்சள் ஏலம்

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கிளை நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர்.

ரூ.45 லட்சத்துக்கு விற்பனை

இதையொட்டி நேற்று நடந்த இந்த ஏலத்தில் விரலி ரகம் மஞ்சள் 800 மூட்டைகளும், உருண்டை ரகம் மஞ்சள் 250 மூட்டைகளும், பனங்காலி ரக மஞ்சள் 50 மூட்டைகளும் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஏலத்தில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 989-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 899-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 442-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 959-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 369-க்கும், அதிகபட்சமாக ஒரு குயிண்டால் ரூ.12 ஆயிரத்து 869-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 1,100 மஞ்சள் மூட்டைகள் ரூ.45 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story