சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி


சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி
x

சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி நடந்தது.

கரூர்

நொய்யல்,

நொய்யல் அருகே மரவாபாளையத்தில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு யோக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஓமியோபதி மருத்துவர் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியர் சரஸ்வதி மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர், யோகா பயிற்சியில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மரவாபாளையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.


Next Story