சர்வதேச யோகா தின நிகழ்ச்சி


சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
x

வாணாதிராஜபுரம் அரசு பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை

குத்தாலம்;

குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் செழியன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் அறிவுறுத்தலின் பேரில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது வாணாதிராஜபுரம் சித்த மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் ஸ்ரீ கவுசிகா, அபிநயா ஆகியோர் சித்த மருத்துவத்தின் நன்மைகள் பயன்கள் ஆங்கில மருத்துவத்திற்கு இணையான சித்த மருத்துவத்தின் பலன் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.


Next Story