அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x

அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் பணிபுரிய விருப்பமுள்ள பதிவுதாரர்கள் தேர்வில் கலந்து கொள்வதற்கு இம்மாதம் 17-ந் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் விண்ணப்பிப்பதற்கு பிறந்த தேதி 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 044-27660250, 9080022088 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story