இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x

பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கோணவிளை பகுதியை சேர்ந்தவர் பால்நாயகம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகாசக்தி (26). இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த மகாசக்தி வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாசக்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story