கடலூர் முதுநகர் அருகே திருமணமான இளம்பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை


கடலூர் முதுநகர் அருகே    திருமணமான இளம்பெண் மர்ம சாவு    போலீசார் விசாரணை
x

கடலூர் முதுநகர் அருகே திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்ககொலிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் வினோதினி (வயது 28). இவருக்கும் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த சண்முகம் மகன் ஜெகதீசன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஜெகதீசன் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக வினோதினி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று வினோதினி திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கினார். இதைபார்த்த பெற்றோர் அவரை கடலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினோதினி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோதினி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story