இளம் பெண் மாயம்


இளம் பெண் மாயம்
x

இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் காலனி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகள் அனுஷா (வயது 19). இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story