திருச்செங்கோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


திருச்செங்கோடு அருகே  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

திருச்செங்கோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே வீரக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருடைய மகன் சிவானந்தன் (வயது 22). இவர் திருச்செங்கோட்டில் யு.பி.எஸ்., கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் சிவானந்தன் கடந்த சில மாதங்களாக தொழில் சரியில்லாத காரணத்தால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 27-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவானந்தன் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story