குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த முத்துப்பிள்ளை மண்டபம் கீழத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் திவாகர் (வயது 26), இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திவாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, குண்டர் சட்டத்தில் திவாகரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.


Next Story