குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த கரந்தை கீரைக்கார தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் திவாகர் (வயது 22). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. திவாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், குண்டர் சட்டத்தில் திவாகரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.


Next Story