குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

தஞ்சை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சோழபுரம் ராமானுஜபுரம் பெரியார்நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் கதிரவன் (வயது27). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பரிந்துரையின்பேரில் திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சர்மிளா வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து கதிரவனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கதிரவனை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story