குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

கும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் மேலானமேடு குடியான தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 19). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் பந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சோமசுந்தரம், குண்டர் சட்டத்தில் மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.


Next Story